அதிதீவிர புயல்கள் உருவாவது 150% அதிகரிப்பு!

ஞாயிறு, 18 ஜூலை 2021 (10:41 IST)
அரபிக்கடலில் அதிதீவிர புயல்கள் உருவாவது கடந்த 40 ஆண்டுகளில் 150% அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
அதன்படி இன்று தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரபிக்கடலில் அதிதீவிர புயல்கள் உருவாவது கடந்த 40 ஆண்டுகளில் 150% அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாறாக, வங்கக்கடலில் இது மாற்றமின்றி காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்