இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ், விபத்து நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றும், பயங்கரமான கனவுகளால் அவர் தொடர்ந்து அச்சத்தில் இருப்பதாகவும் அவரது சகோதரர் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அவரது நலன் குறித்து விசாரித்தாலும், விஸ்வாஸ் யாரிடமும் பேசுவதில்லை என்றும், மன அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென நள்ளிரவில் எழுந்து நடுங்கி கொண்டிருப்பதாகவும், அவரால் தூங்க முடியவில்லை என்றும், பயங்கர கனவுகளால் அவர் தொடர்ச்சியாக அதிர்ச்சியுடனும் பயத்துடனும் உள்ளார் என்றும் அவரது சகோதரர் பேட்டி அளித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.