எதிர்ப்புகளை மீறி குவியும் விண்ணப்பம்: 4 நாட்களில் 95 ஆயிரம் பேர்!

செவ்வாய், 28 ஜூன் 2022 (08:00 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது என்பதும் இது குறித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு ரயில்கள் தீ வைக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் எதிர்ப்புகளை மீறி அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்வதற்கு 4 நாட்களில் சுமார் 95 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஜூலை 24ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்றும் அதன்பிறகு நான்கு ஆண்டு இராணுவ தேவைக்காக அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய மாநில அரசு உறுதியளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்