10, 12-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

செவ்வாய், 21 ஜூன் 2022 (13:57 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறுகூட்டல், விடைத்தாள் நகலை பெற நாளை முதல் அதாவது ஜூன் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
 
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்ற சான்றிதழை வைத்து மாணவர்கள் தங்களுடைய மேற்படிப்புகளுக்கு உதவி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதிகாரபூர்வ இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்