உள்ளாடையின் அளவை கேட்ட ரசிகர் : பொங்கி எழுந்த நடிகை

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (16:58 IST)
பேஸ்புக் பக்கத்தில் நடிகை நேரடியாக பேசிக் கொண்டிருந்த போது, ஒரு ரசிகர், அவரின் உள்ளாடையின் அளவை கேட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.


 

 
தெலுங்கு நடிகை சரவ்யா ரெட்டி, கடந்த 12ம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரிடயாக உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் ‘ உங்கள் உள்ளாடையின் அளவு என்ன?” என்று கேட்டு விட்டார்.
 
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சர்வயா, அந்த ரசிகரை திட்டித் தீர்த்து விட்டார்.  “ நான் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, என்னுடைய உடலை ஏன் பார்க்கிறீர்கள்?. இந்தியா தற்போது கீழே போய் கொண்டிருக்கிறது.. (ஒரு கெட்ட வார்த்தை.. பயன்படுத்துகிறார்).. ஆமாம், நான் கெட்ட வார்த்தையை பயன்படுத்துகிறேன். 
 
ஆனால், உங்களின் கருத்தை பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் என்னுடைய உடலை காட்டவில்லை. என்னுடைய மார்பை விலை பேசாதீர்கள். ஆமாம், எனக்கு பெரிய அளவில் மார்பகங்கள் உள்ளன. உனது தாய்க்கும் அதேதான் இருக்கிறது. எல்லா பெண்களுக்கும் இருக்கிறது” என்று கோபமாக பேசினார்.
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்