போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிராக மனு! வீராங்கனைகள் அதிர்ச்சி

திங்கள், 23 ஜனவரி 2023 (13:53 IST)
போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிராக மனு! வீராங்கனைகள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்னால் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மல்யுத்த வீரர்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்தி நீதியை கேலிக்கூத்தாகியுள்ளனர் என்றும் வீராங்கனைகள் உண்மையிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருந்தால் சட்ட ரீதியாக அணுகி இருப்பார்கள்என்றும் மல்யுத்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
 
மேலும் போராட்டம் நடத்திய தினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களுக்கு எதிராக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்