லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் தந்தால் ரூ. 10 லட்சம்! என்ஐஏ அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:08 IST)
லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் தந்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அவரைப் பற்றிய தகவல் அளித்தால் பத்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

லாரன்ஸ் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் மீது, கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டு குற்றப்பத்திரிகையை   தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பாடகர் சித்து, மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்பட, பல பிரபலங்களின் கொலை சம்பவங்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் பொறுப்பேற்று, நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் என்பவரை, பிஷ்னோய் கும்பலின் உதவியுடன் இந்திய அரசு கொன்றதாக சமீபத்தில் குற்றச்சாட்டை கனடா அரசு எழுப்பியது. மேலும், ஹிந்தி நடிகர் சல்மான் கானை மிரட்டி வருவதும் பிஷ்னோய் கும்பல் தான் என்றும் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்