நேற்றை சரிவுக்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (09:25 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் சிறிது அளவு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 30 புள்ளிகள் உயர்ந்து 64,418 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 19682 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  பங்கு சந்தை தற்போது உச்சத்தில் இருப்பதால் சில புள்ளிகள் இறங்குவது சகஜம் என்றும் அதனால் பங்குச்சந்தை ஒரேடியாக இறங்கும் என்று அர்த்தமில்லை என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தகுந்த ஆலோசகர்களிடம் ஆலோசனை செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்