நள்ளிரவே அமலான விலை குறைப்பு: பெட்ரோல் ரூ.100-க்கு கீழ் விற்பனை!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (08:23 IST)
தமிழக பட்ஜெட் அறிவிப்பில் முதன்முறையாக பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் சென்றுள்ளது. 
 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். 
 
அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் ரூ.100க்கும் கீழ் குறைந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. 
 
ஆம், சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.3.02 காசு குறைந்து ரூ.99.47 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், டீசல் விலை 28வது நாளாக மாற்றமின்றி ரூ.94.39-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்