பகல் 12 மணிக்கே உறுதியானது வெற்றி – அசத்தும் திமுக வேட்பாளர்கள் !

வியாழன், 23 மே 2019 (13:01 IST)
வாக்கு எண்ணிக்கை பாதிகட்டத்தை எட்டும் முன்னரே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் சிலர் எட்ட முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசத்தைப் பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 6 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையிலேயே திமுக கூட்டணி வேட்பாளர்கள் சிலர் தங்கள் வெற்றியை உறுதி செய்யும் அளவுக்கு முன்னிலைப் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 19 பேர் முதல் சுற்றில் இருந்தே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் உள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு :-

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்