வாட்ஸ் ஆப்பில் 24 மணிநேரத்தில் மறையும் மேசேஜ் சேவை

செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (23:25 IST)
வாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விரைவில் புதிய அப்டேட் கொடுக்கவுள்ளது அந்நிறுவனம்
 

வாட்ஸ் ஆப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் பிரைவசி என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பயனர்களின் விவரங்கள் தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியானதால் மக்கள் பயந்து டெலகிராம் ஆப்பிற்கு மாறினர்.

தற்போது தகவல் திருடப்படாது என்ற அடிப்படையில் பலரும் தைரியமாக  பயன்படுத்தி வருகின்றனர். அதில். கடந்தாண்டு வாட்ஸ் ஆப்-ல் டிஸ்அப்பியரிங் மெசேஜ் அறிமுகம் செய்தது. , மேசேஜ் வந்த 7  மணிநேரத்தில் வாட்ஸ் ஆப் மெசேஜ்கள்  தானாக அழியும் வகையில் சோதனை செய்துள்ளது. இதில் புதிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. அத்துடன் டிஸ்அப்பியரிங் மெசேஜ் சேவைகளுக்கான கால அவகாசத்தை 24 மணிநேரத்திற்கு குறைக்கும்படியான மாற்றத்தைச் செய்ய சோதனை முயற்சிகள் நடைபெற்றுவருகிறது.

மேலும் வாட்ஸ் ஆப் குரூப் மெசேஜ்ஜை பொறுத்தவரையில், அட்மின் மட்டுமே இந்த மறையும் வகையிலான மெசேஸ் சேவையைப் பயன்படுத்த முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்