முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், ஜூலை 8-ஆம் தேதி சந்தையில் அறிமுகமாக உள்ளன. நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், உள்நாட்டுத் தயாரிப்பாக மட்டுமன்றி, உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
இரண்டு மாடல்களுமே அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவிருப்பதுடன், அவற்றின் விலை ₹5,000-லிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.