தனக்குத் தானே இறந்துவிட்டதாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த நபர்...

வியாழன், 22 ஏப்ரல் 2021 (22:03 IST)
தொழில்நுட்பம் மனிதனின் செயலை எளிமையாக்கப் படைக்கப்பட்டாலும் அதன் மூலம் மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல், அதற்கு அடிமை யாக மாறுவது தற்போது அதிகமாகி வருகிறது.

இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் வருகையால் மக்கள் தங்காஇ பெருமையாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான பொய்யான ஆடம்பரங்களுக்குச் சிக்கிவருகின்றனர்.

ஒருசிலர் சமூகவலைதளங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு நபர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பஞ்சத்தால், மாரடைபபல் தான் இறந்துவிட்டதாகக் கூறி தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த்தால் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.

இவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்