சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்வது ஏன்...?

சனி, 9 ஜூலை 2022 (13:39 IST)
ஒன்பது கோள்கள் அமைந்திருக்கும் நவ கிரகத்தின் தலைவன் சூரிய பகவான் அவர் தான் ஆஞ்சநேயரின் குரு ஆவார். 

தன் குருவிற்காக எதையும் செய்ய தயா ராக இருந்தார் ஆஞ்சநேயர்.தன் குரு தட்ச ணையை செலுத்துவதற்காக எதாவது கட் டளையிடும் படி சூரியபகவானிடம் வலியு றுத்தினார்.
 
பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, சூரியப கவான் தன் மகன் சனிபகவானை வீட்டிற் கு அழைத்து வரும்படி அனுமனிடம் வேண்டினார். 
 
சனிபகவான் வேறு எவரும் இல்லை என க்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகன் என் றும்,யம மற்றும் யாமிக்கு மூத்த சகோதரர் என்றும் கூறினார்.இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சனி பகவானை சந்திக் க ஹனுமன் புறப்பட்டார்.
 
சூரியபகவானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஹனுமன் சனினிபகவானை சந்தித்து அவர் தந்தையின் கோரிக்கை யை கூறினார். சனிபகவான் தனது தந்தையின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமின்றி ஹனுமனின் தோற்றத்தை யும்,வாலையும் பார்த்து கேலி செய்தார்.
 
சனிபகவானின் கர்வத்தைப் பார்த்து ஹனுமன் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். அவர் சனிபகவானை தனது வாலால் சுற்றி இறுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சனிபகவானுக்கு வலி தாங்க முடியாமல் அழுக ஆரம்பித்தார்.
 
தன் தவறை உணர்ந்தார் தன் சக்தியை தவறுதலாக இனி பயன்படுத்த மாட்டேன் என்று வாக்களித்தார். பின்னர் தன் தந்தை சூரியபகவானின் கோரிக்கையை ஏற்று வீடு திரும்புவதாக உறுதியளித்தார்.
 
ஹனுமானின் இச்செயலால் சனிபகவா னின் உடல் முழுவதும் காயமடைந்து வலியால் துடித்தார்.ஹனுமான் அவரின் வலியை குறைப்பதற்கு எண்ணெய் கொடுத்து அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்ள சொன்னார். இதனால் அவரின் வலி குறைந்தது. ஆகையால் சனிக்கிழமைகளில் ஹனுமன் பக்தர்கள் சனிக்கு எண்ணெய் ஊற்றி வழிபட்டு வந்தால் சனிபகவானின் தொந்தரவில் இருந்து தப்பிப்பார்.
 
ஆகையால், சனி பகவனின் கோபத்தை எதிர்கொள்பவர், எவரும் அனுமனின் உதவியை நாடினால், அவர்களை துன்புறுத் தாமல் மன்னிக்குமாறு சனியைக் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்