திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி, 'தீபாவளி ஆஸ்தானம்' விமரிசையாக நடைபெற்றது. ஏழுமலையான் பெருமாள் சர்வ பூபால வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். அத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு மாலை 5 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை சிறப்பாக நடைபெற்றது.