திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று கோலாகலமாக நிறைவடைகிறது. பத்து நாட்களாக நடைபெற்ற இந்த உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகளிலும் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.