மனிதன் இயற்கையாக நடக்கும் முறையை இது மீண்டும் கொண்டு வருகிறது. இதனால் முழங்கால், இடுப்பு வலிகள் குறையலாம். மேலும், நரம்புகள், தசைகள் மிதமான அழுத்தத்தை உணர்ந்து இயல்பாக வேலை செய்ய உதவுகிறது.
நமது உடலில் நேர்மறை மின்சக்தி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் பூமியில் எதிர்மறை மின்சக்தி உள்ளது. வெறும் காலில் பூமியில் நடக்கும்போது, இந்த இரண்டு சக்திகளும் சமநிலையை அடைந்து நரம்பு செயல்பாடு சீராகிறது, மன அழுத்தம் குறைகிறது, ரத்த அழுத்தம் நிலைபெறுகிறது, உடல் ஆற்றல் கூடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.