ஐபிஎல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டாலும் தாய்நாடு சென்ற வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. அப்படி விளையாடாத விரும்பாதவீரர்களை அணி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும் விருப்பமிருப்பவர்கள் மட்டும் விளையாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் வெளிநாட்டு வீரர்கள் விலகினால் ஐபிஎல் போட்டியில் பழைய சுவாரஸ்யம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் வீரர்கள் அதிகளவில் விளையாடி வருகின்றனர். அவர்கள் விளையாடாத பட்சத்தில் போட்டி விறுவிறுப்பாக இருக்காது என்ற கருத்தும் எழுந்துள்ளது.