ஷிகார் தவானுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே மோதலா? பின்னணி என்ன?

புதன், 27 ஜூலை 2022 (16:00 IST)
ரோஹித் ஷர்மா ஷிகார் தவனின் பேட்டிங் அனுகுமுறையில் மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கிறாராம்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். அவருக்குப் போட்டியாக கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அணியில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரிகள் ஷிகார் தவானிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி காட்டவேண்டும் என ரோஹித் ஷர்மா நினைக்கிறார். ஆனால் தவானோ முதலில் நிதானமாக விளையாடி பின்னர் ரன்கள் சேர்த்து ஆடுவது அவரது வழக்கம். இது சம்மந்தமாக பிசிசிஐ தவானிடம் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் வெளியில் சொல்லப்படுவது போல இருவருக்கும் இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்