ஒரு நாயகன் உதயமாகிறான்… விராட் கோலி, ஷுப்மன் கில்லுக்குப் பிறகு சாய் சுதர்சன்தான்!

vinoth

சனி, 31 மே 2025 (08:34 IST)
இந்த சீசனை மிகச்சிறப்பாக தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி சில லீக் போட்டிகளைத் தோற்றதால் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியையும் தோற்று வெளியேறியுள்ளது.

இந்த சீசனில் அந்த அணிக்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன். இந்த சீசனில் அவர் 54  ரன்கள் சராசரியில் 759 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஆறு அரைசதங்களும், ஒரு சதமும் அடக்கம். 88 பவுண்டரிகளையும் 21 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

இந்த சீசனில் இவரை எட்டிப்பிடிக்க வேறு எந்த வீரருக்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி(973) மற்றும் ஷுப்மன் கில்(890) ஆகியோருக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்