நேற்றைய ஐபிஎல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாபை வீழ்த்திய பின்னான கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தபோதும், இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணியாக இருந்து வருகிறது ஆர்சிபி. ஆனாலும் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் ஆர்சிபிக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றால் அதற்கு காரணம் விராட் கோலிதான். அவருக்காக இந்த முறையாவது ஆர்சிபி கப் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த முறை செம ஃபார்மில் இருக்கும் ஆர்சிபி நேற்றைய குவாலிபயர் போட்டியில் பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. அந்த ஒரு போட்டியை வென்று விட்டால் போதும். ஆர்சிபியின் 18 வருட கோப்பைக் கனவு நனவாகிவிடும். இதற்காகதான் கோலியும், அவரது ரசிகர்களும் பல ஆண்டுகள் தவமாக காத்திருக்கிறார்கள்.
நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் துள்ளிக் குதித்த விராட் கோலி தன் சக வீரர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து “One More to go” (இன்னும் ஒரு ஆட்டம்தான்) என்று காதில் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K
ONE MORE ☝️
— IndianPremierLeague (@IPL) May 29, 2025
That's the word from the #RCB camp - IYKYK ❤️#TATAIPL | #PBKSvRCB | #Qualifier1 | #TheLastMile pic.twitter.com/kNe1kpgPYS