தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விராட் கோலிக்கு 36 வயதும், ரோஹித் ஷர்மாவுக்கு 37 வயதும் ஆகிறது. 2027 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டு அவர்கள் அதில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அட்டவணை ஜூலையில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆசியக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.