ரோஹித் கேப்டன்சிக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை… பிசிசிஐ தரப்பு தகவல்!

திங்கள், 2 ஜனவரி 2023 (14:56 IST)
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விரைவில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன.

உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிரந்தர கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் விரைவில் ரோஹித் ஷர்மாவை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப் படலாம் எனவும் அதுகுறித்து சமீபத்தில் பிசிசிஐ விவாதித்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுபற்றி பிசிசிஐ தரப்பில் மறுப்பு சொல்லப்பட்டுள்ளது. ஒரு பிசிசிஐ அதிகாரி “அப்படி எதையும் விவாதிக்கவில்லை என்று மறுத்துள்ளதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்