அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் சாதனை

புதன், 27 செப்டம்பர் 2023 (21:01 IST)
சீனாவின் ஹாங்சுவில் 19 வது ஆசிய விளையாட்டு தொடர் நடந்து வருகிறது,. இதில், இன்று நேபாளம்- மங்கோலியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

இதில், மங்கோலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதில், குசால் மல்லா 34 பந்தில் சதம் அடித்தர். இது டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.

முதல் 6 பந்துகளில் சிக்சர் அடித்த அவர், அடுத்து 7 வது பந்தில் 2 ரன்னும், 8 பவது பந்திலும் 9 வது பந்திலும் சிக்சர் அடித்தார்.

உலகில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.  இது டி 20 தொடரில் அதிக ரன்கள் ஆகும். இதற்கு முன் ஆப்கான் அணி 278 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். இன்றைய போட்டியில் மங்கோலியா அணி 41 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்