வசந்தி அடிக்கடி செல்போனில் பேசுவதை அவரது கணவர் மற்றும் மகன்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் மூவரும் சேர்ந்து வசந்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த வசந்தி மயக்கமடைந்த நிலையில், அவரை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து, போலீசார் பொன்னுவேல் மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வசந்தி யாரிடமோ அடிக்கடி செல்போனில் பேசியதை தவறாக நினைத்து இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.