பாகிஸ்தான் பந்து வீச்சாளருக்கு பந்துவீச தடைவிதித்த ஐசிசி!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:58 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீசுவது குறித்த சர்ச்சை எழுந்தது.

ஆஸியில் நடந்த பிக்பாஷ் தொடரின் போது முகனது ஹஸ்னைன் பந்துவீசுவது குறித்து நடுவர்கள் ஆட்சேபம் தெரிவித்து ஐசிசியில் புகாரளித்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் அவருக்கு பந்துவீச்சு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதில் அவர் கையை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு மேலாக சுழற்றுவது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது.  இது சம்மந்தமாக பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், அவரின் பந்துவீச்சு முறை சரிசெய்யப்பட்ட பின்னர் அவர் மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்