ஐபிஎல் 2022-; லக்னோ அணி சூப்பர் வெற்றி

Webdunia
சனி, 7 மே 2022 (23:13 IST)
ஐபிஎல்-15வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடியது.

இன்றைய போட்டியில்,டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் அய்யர்  தலைமையிலான கொல்லத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது.

எனவே லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், காக்  50 ரன்களும், ஹூடா 41ரன் களும், பாண்ட்யா 25  ரன்களும் , ஸ்டொனிஸ் 28 ரன் களும், ஹோல்டர் 13 ரன் களும்  அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில், ல்க்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, கொல்கத்தாவுக்கு 177 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், ரஷல் 45 ரன் களும், நரென் 22 ரன் களும், பின்ச் 14 ரன் களும் அடித்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன் களில் ஆட்டமிழக்கவஎ, 14.3 ஓவர்களில்101 ரன் களில்  அனைத்து விக்கெட்டுகளும் இழந்து தோற்றது.
எனவே லக்னோ அணி 75 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி சார்பில் கான் மற்றும் ஜேசன் தலா 3 விக்கெட்டும், மொஷன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்