அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்துள்ளார். இதற்கிடையில் விராட் கோலியும் ஓய்வை அறிவித்ததால் இந்திய அணியில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.
இதனால் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் மற்றும் பும்ரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு செல்லும் அணி விவரம் மே 24 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.