இந்நிலையில் ஆசியக் கோப்பைத் தொடர் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் “ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவேக் கூடாது. இந்தியா எங்கு விளையாடினாலும் வெற்றியே பெறும். ஆனால் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானோடு விளையாடவேக் கூடாது. விளையாட மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.” எனக் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கேதார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.