நானே முதல்ல ‘தல’ தோனி ரசிகன்.. அப்புறம்தான் இந்த கேப்டன்லாம்! – ஹர்திக் பாண்ட்யா!

செவ்வாய், 23 மே 2023 (12:32 IST)
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் இடையே குவாலிஃபயர் போட்டி நடைபெற உள்ள நிலையில் தோனி குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.



பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகள் முடிந்து ப்ளே ஆப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் குவாலிஃபயர் போட்டியில் சிஎஸ்கே அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதே கிடையாது என்ற நிலையில் இன்று சிஎஸ்கே வரலாற்றை மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து பேசியுள்ள குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “மகேந்திர சிங் தோனி ரொம்பவும் சீரியஸானவர் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான் அவரிடம் நிறைய ஜோக் சொல்லி விளையாடுவேன்.அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, சகோதரரும் கூட. அவரது செயல்கள் மூலமாக பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். எப்போதுமே நான் தோனி ரசிகனாகதான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்