சமீபகாலமாகக் கிரிக்கெட் போட்டிகளில் எல்லைக்கோட்டு சாகசக் கேட்ச்கள் அதிகம் கவனம் பெற்று வருகின்றன. எல்லைக் கோட்டருகே நிற்கும் ஃபீல்டர் வரும் பந்தை பிடித்துவிட்டு தான் எல்லைக் கோட்டை தாண்டி சென்றுவிடுவோமோ என எச்சரிக்கையாக பந்தை வெளியே தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து அந்த பந்தை பிடித்து கேட்ச் ஆக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அதே போல ஒரு வீரர் பந்தை மைதானத்தினுள் தூக்கியெறிந்து எல்லைக் கோட்டைத் தாண்டி செல்லும்போது, அதை மைதானத்தில் நிற்கும் மற்றொரு வீரர் கேட்ச் பிடித்து அவுட்டாக்குவதற்கும் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பந்தை தூக்கியெறிந்த வீரர் சக வீரர் அதைக் கேட்ச் பிடிக்கும்போது மைதானத்துக்குள் திரும்ப வந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவர் எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்றால் அதுவும் சிக்ஸராகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அமலுக்கு வரவுள்ளன.