கோலி 2031 உலகக் கோப்பையில் கூட விளையாடுவார்… டேவிட் வார்னர் கருத்து!

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:06 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்தான் கடைசி தொடராக இருக்கும் என கருத்துகள் எழுந்துள்ளன. ஏனென்றால் கோலிக்கு இப்போது 35 வயது, ரோஹித் ஷர்மாவுக்கோ 36 வயது. ஆனால் கோலி கண்டிப்பாக அடுத்து 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பையில் விளையாடுவார் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸி வீரர் டேவிட் வார்னரின் பதிவு ஒன்றில் ரசிகர் ஒருவர் கோலி 2031 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவார் என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த வார்னர் “கண்டிப்பாக 2031 உலகக் கோப்பையில் கோலி விளையாட வாய்ப்புள்ளது. அவர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். மேலும் கிரிக்கெட்டை அவர் அதிகமாக நேசிக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்