ஐசிசில புகார் குடுக்குறதுனா குடுத்துக்கோங்க! – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ பதில்!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (10:32 IST)
காஷ்மீர் ப்ரீமியர் லீக் தொடர்பான விவகாரத்தில் ஐசிசியை பாகிஸ்தான் அணுகினால் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் காஷ்மீர் ப்ரீமியர் லீக் என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட செல்ல கூடாது என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸை பிசிசிஐ வற்புறுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து ஐசிசியில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிசிசிஐ மீது குற்றம் சாட்டியுள்ள கிப்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கியவர். பிசிசிஐ யாரையும் வற்புறுத்தவில்லை. காஷ்மீர் ப்ரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசிக்கு கொண்டு சென்றால் அதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்