முத்தரப்பு டி20 போட்டி: இலங்கை அணி பேட்டிங்

வெள்ளி, 16 மார்ச் 2018 (18:42 IST)
இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் ஆறாவது டி20 போட்டியில்  வங்காளதேச அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
 
இன்று இலங்கை- வங்காளதேசம் இடையேயான ஆறாவது டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று வங்காளதேசம் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்