தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நாள் தொடரில் விளையாட செல்கிறது, அப்போது ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருக்கும் விடைகொடுக்கும் விதமாக அவர்களைக் கௌரவிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.