ரிங்கு சிங் மேல் எந்த தவறும் இல்லை… அவரை அணியில் எடுக்காததற்குக் காரணம் இதுதான் – அஜித் அகார்கர்!

vinoth

வெள்ளி, 3 மே 2024 (07:19 IST)
அடுத்த மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான்.

இதுபற்றி இப்போது விளக்கம் அளித்துள்ளார் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர். அதில் “ரிங்கு சிங் மேல் எந்த தவறும் இல்லை.  அவரை தேர்வு செய்யாதது எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது. இரண்டு ஸ்பின்னர்கள் கூடுதலாக தேவை என ரோஹித் ஷர்மா சொன்னதால், அவரை ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் வைக்கவேண்டிய சூழல் உருவானது.  அவர் 15 பேர் கொண்ட அணிக்கு மிகவும் நெருக்கமாகவே இருந்தார். அவரைப் போலவே ஷுப்மன் கில்லும் இருந்தார்” எனக் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

இந்திய அணி
ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்தர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜாஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்