கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு.....

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 5வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தததை அடுத்து மும்பை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது

ஏற்கனவே மும்பை அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.

இந்நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சொற்ப ரன்களில் மும்பை ஆட்டமிழந்ததால் கொல்கத்தா அணிக்கு சாதகமாக இப்போட்டி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
கொல்கத்தா அணியின் ரஸல் 15 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆனால் மும்பை அணி பந்துவீச்சினால் கொல்கத்தாவை மடக்க வாய்ப்புள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்