ரஷ்யா கைப்பற்றிய முதல் நாளில் ஹெர்சான் நகரம் எப்படியிருக்கிறது?

வெள்ளி, 4 மார்ச் 2022 (17:06 IST)
ரஷ்யா கைப்பற்றிய பிறகு, தன் நகரத்தை எச்சரிக்கை உணர்வுடன் தாராஸ் பார்த்தபோது, சாலையில் ராணுவ வாகனங்கள் இருந்ததையும், ஆனால், ரஷ்ய படையினர் அங்கு இல்லாததையும் அவர் கண்டார்.
 
யுக்ரேனின் தெற்கில் அமைந்துள்ள துறைமுக நகரமான கேர்சன், ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தொடரும் தீவிர சண்டைக்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய முதல் பெரிய நகரமாகும்.
 
ஆனால், தாராஸ் (உண்மையான பெயர் அல்ல) பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறுகையில், இன்று பல்பொருள் அங்காடிக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த சுமார் 200 பேரிடம் நம்பிக்கை நிலவியதாக தெரிவித்தார்.
 
30-40 நிமிடங்களுக்குப் பின் தன்னால் இறைச்சியை வாங்க முடிந்ததாகவும், ஆனால், கடந்த சில தினங்களாக தன் நண்பர்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் காத்திருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
 
“அவர்களிடையே நம்பிக்கை மற்றும் ஆற்றல் இருந்ததை நான் கவனித்தேன். இன்னும் சில தினங்கள் அல்லது வாரங்களில் இது விரைவாக முடிவுக்கு வரும் என அவர்கள் நம்புகின்றனர்.
 
“குறிப்பாக, பெண்கள், யுக்ரேன் ராணுவம் குறித்து பெருமையாக உணர்வதை பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். யுக்ரேன் படையினர் இங்கு வருவார்கள், நாம் அவர்களை (ரஷ்ய படையினரை) கொல்வோம், பின்னர் பழைய நிலை திரும்பும் என அவர்கள் கூறுகின்றனர்” என்றார்.
 
அவர்களின் நம்பிக்கை தாராஸிடமும் இருக்கிறதா என கேட்கும்போது, “நிச்சயமாக” என்றும், கேர்சன் குடிமக்கள் 95 சதவீதத்தினரிடம் நம்பிக்கை நிலவுவதாகவும் தெரிவித்தார்.
 
“எங்கள் நகரத்தில் யுக்ரேன் தேசிய கொடிதான் இருக்கும் என எங்களின் மேயர் தெரிவித்துள்ளார். அதனால், தற்போது இந்த நகரத்திற்குள் இருக்கும் ரஷ்ய படையினருக்கு எவ்வித திட்டங்கள் இருப்பதாகவும், எதற்காகவோ அவர்கள் காத்திருப்பதாகவும் நான் நினைக்கவில்லை என்றார்.
 
“குண்டு தாக்குதலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அடுத்த சில தினங்கள் நாங்கள் வாழ்வதற்கு முயற்சி செய்வோ” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்