வெள்ளை மாளிகை அருகே துப்பாகியுடன் சுற்றிய மர்ம நபர் சுட்டுக் கொலை

Webdunia
சனி, 21 மே 2016 (11:02 IST)
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒரு மர்ம நபரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு படையினர் எவ்வளவு எச்சரித்தும் அந்த நபர் ஒத்துழைக்க மறுத்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
அப்போது அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை. அருகிலிருந்த மைதானம் ஒன்றில் கோல்ப் விளையாட சென்றிருந்தார். 
 
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
அடுத்த கட்டுரையில்