சேப்பங்கிழங்கில் உப்பு, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குழையாமல் வேகவைத்து கொள்ளவும். தோலுரித்து இரண்டாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கிழங்கை பொரித்து எண்ணெய்யை வடித்து விடவும்.
பொரித்த பிறகு எண்ணெய்யை குறைத்து விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, அன்னாசிப்பூ தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலாப்பொடி, உப்பு போன்றவற்றை வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சைமிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி பொரித்த கிழங்கை போட்டு திக்கானவுடன் இறக்கவும்.