தமிழகத்தில் அன்புமணி அலை வீசுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, பேசுகையில், மதுவிலக்கை அதிமுக, திமுக அமல்படுத்துவோம் என சொன்னாலும், மக்கள் நம்புவது பாமகவைத்தான்.
தமிழகத்தில் உள்ள 20 சதவீத நடுநிலை வாக்காளர்கள், 25 சதவீத புதிய வாக்காளர்கள், மதுவிலக்கை ஆதரிக்கும் 30 சதவீத பெண்கள் என 75 சதவீத வாக்காளர்கள் அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். ஆனால், அன்புமணியை சில சக்திகள் தோற்கடிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.