தமிழ் சினிமாவின் காமெடி கிங் கவுண்டமணிக்கு இன்று -- வது பிறந்தநாள். வயது வருகிற இடத்தில் எதற்கு இடம் விட்டோம் என்றால், எந்த வயதை எழுதினாலும், தப்பா எழுதிட்டானுங்க என்றுதான் சொல்வார் கவுண்டர். அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் பேரன் பேத்தி எடுத்துவிட்டார்கள்.
கவுண்டமணி பேட்டி தருவதில்லை. நடிக்கிறவன் பேசி நாடா மாறப் போகிறது என்ற உண்மை சித்தாந்தம்தான் அதற்கு காரணம். அந்தக் காலத்திலேயே ஆங்கிலப் படங்கள்தான் அவருக்கு இஷ்டம். நூற்றியெட்டு அம்மன் பெயர்களை மூச்சுவிடாமல் சொல்வதைப் போல் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்களையும் நடிகர்களையும் சரளமாக பேச்சில் சேர்த்துக் கொள்ளும் மூளைவாதி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 49 ஓ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். குரல் அப்படியே வெங்கலமாக இருந்தாலும் உடலை வயோதிகம் உருக்கிவிட்டது. இந்த உரல் உலக்கை காம்பினேஷன் எடுபடுமா என்பதை 49 ஓ வெளியான பிறகே சொல்ல முடியும்.