துபாய்க்கு செல்லும் விக்ரம் வேதா படக்குழு! விரைவில் படப்பிடிப்பு

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:19 IST)
விக்ரம் வேதா இந்தி பதிப்பின் படப்பிடிப்பு துபாயில் விரைவில் தொடங்க உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அமீர்கான் விலகவே அவருக்குப் பதில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். அதையடுத்து இப்போது விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தின் களம் உத்தர பிரதேசத்தின் லக்னோ வில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததாம். ஆனால் அங்கு இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் உள்ளதால், துபாய்க்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளனராம். அங்கு லக்னோ போன்ற செட்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்