பதவி ஆசைக்காக சிம்பு போட்டியிடவில்லை - டி.ராஜேந்தர்

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (16:39 IST)
நடிகர் சங்க தேர்தலில் பதவி ஆசைக்காக சிம்பு போட்டியிடவில்லை என அவரது தந்தை  நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.


 

 
சிவகங்கை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சிவகங்கைக்கு சென்ற நடிகர் டி.ராஜேந்தர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்பொழுது செய்தியாளர்கள் ஒருவர் சிம்பு பதவி ஆசைக்காக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார என்று கேள்விக்கு பதிலளித்த அவர் " எனது மகன் சிலம்பரசன் பதவிக்கு ஆசைப்பட்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.
 
மேலும், நடிகர் சங்கத்திற்கு அவர் புதியவர் அல்ல என்றும் 9 வயதில் இருந்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்,