கடவுளே! கொரோனா இல்லாத உலகத்தை திருப்பி தாங்க - சீரியல் நடிகையின் பிரார்த்தனை!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (09:13 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியம்  கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் ஷூட்டிங்கின் பொது கோவிலில் எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டு "கடவுளே! கொரோனா இல்லாத உலகத்தை திருப்பி கொடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

God!! Give us back the Corona free World

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்