கோடியில் சம்பளம் வாங்கியும், கடனுக்கு கை ஏந்திய பிரபாஸ்: ராஜமெளலி நெகிழ்ச்சி!!

Webdunia
புதன், 3 மே 2017 (12:02 IST)
பாகுபலி படத்தின் முதல் பாகம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று. தற்போது படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து வாசூல் சாதனை படைத்து வருகிறது.


 
 
இந்நிலையில் பாகுபலி முதல் பாகத்திற்கு பிரபாஸ் ரூ. 20 கோடியை மட்டுமே சம்பளமாக பெற்றார். இரண்டாம் பாகத்திற்காக 5 வருடம் வேறு எந்த படங்களையும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.
 
அப்போது தான் பிரபாஸுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த தயாரிப்பாளர்கள் பணத்தோடு வந்து பிரபாஸின் கால்ஷீட் வாங்க நினைத்தனர். 
 
பிரபாஸ் அப்போது ராஜமௌலியிடம் இது குறித்து பேசியுள்ளார். ராஜமெளலியோ கடன் வாங்கிகொள், படத்தில் நடிப்பேன் என வாக்குறுதி கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளார். 
 
இதனால் வந்த வாய்ப்புகளை விட்டுவிட்டு கடன் வாங்கி பணக்கஷ்டத்தில் இருந்தார் பிரபாஸ். மேலும், ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டது. ஆனால் பாகுபலிக்காக அதை பிரபாஸ் ஏற்க மறுத்துவிட்டார் என ராஜமெளலி நெகிழ்ச்சியாக பேசினார்.
அடுத்த கட்டுரையில்