திருட்டு டிவிடிக்கு எதிராக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் போலீசார் திருட்டு டிவிடிக்கு எதிராக சோதனை நடத்தினர்.
முன்னதாக கும்பகோணத்தில் மனிதன் திரைப்படத்தை ஒளிபரப்பிய டி.வி. உரிமையாளரை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி ஐபிஎஸ் உத்திரவின்படி காவல் ஆய்வாளர்கள் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடி விற்பனையை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்பட்டது. இதில் கோவை, மதுரை உள்பட பல முக்கிய நகரங்களில் ஏராளமான திருட்டு டிவிடிகள் பிடிபட்டதுடன், விற்பனை செய்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டன.
விஷாலின் புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது முக்கியமானது.