ஏ.ஆர்.முருகதாஸ் இருமொழிகளில் இயக்கிவரும் படத்தில் மகேஷ்பாபு உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இந்தி அகிரா படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் முருகதாஸ் இயக்கி வருகிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. ராகுல் ப்ரீத் சிங் நாயகி.
இந்தப் படத்தில் மகேஷ்பாபு உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்கிறார்.