தமிழ் & தெலுங்கில் லிங்குசாமி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (15:44 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வாய்ப்புக் கிடைக்காத இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வாரியர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சான் , சண்டக்கோழி 2 என வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த லிங்குசாமிக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையோடு படக்குழுவினர் உழைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்