அடுத்த படத்திற்கு கொடைக்கானலை தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (18:40 IST)
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு கிளம்ப படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் 
 
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் சமீபத்தில் கொடைக்கானல் சென்று படத்திற்கான லொகேஷனை தேர்வு செய்துள்ளதாகவும் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும், முக்கிய வேடங்களில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கும் என்று கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்